இலங்கையில் மீண்டும் அச்சுறுத்தலாக மாறி வரும் கோவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு
நாட்டில் மேலும் 503 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 1,185 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய, இன்று இதுவரையில் 1,688 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 299,874 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தளவு பதிவாகி வந்த நிலையில்,தற்போது மீண்டும் அதிகளவிலான தொற்றாளர்கள் நாளாந்தம் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய , நாட்டில் நேற்று (26) கோவிட் தொற்றால் 48 பேர் மரணித்துள்ளனர்.
இதன்படி, நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,195 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam