பூண்டுலோயா கந்தசாமி தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு (Photos)
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை வலயத்திற்கு உட்பட்ட பூண்டுலோயா கந்தசாமி தமிழ் மகா வித்தியாலயத்தில் 1977ஆம் ஆண்டு முதல் 1987 வரை கல்விகற்றுத்தந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு 'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்ற தொனிபொருளில் வத்தளையில் இடம்பெற்றிருந்தது.
நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிப்பு
இந்த நிகழ்வு, பூண்டுலோயா கந்தசாமி தமிழ் மகா வித்தியாலயத்தின் 1987ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர மாணவர்கள் வட்டாரத்தில் இராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி தலைமையில் முப்பத்தாறு வருடங்களின் பின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் குறிப்பிட்ட காலப்பகுதியில் கல்விகற்றுத்தந்த அதிபர், ஆசிரியர்கள் என முப்பதிற்கும் அதிகமானோர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி மற்றும் வெளிநாடுகளில் இருந்து பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டு ஆசிரியர்களின் உரையும் இடம்பெற்று நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

சத்யாவிற்கு ஊசி போடப்போன சிட்டி, முத்துவிற்கு வந்த போன், பிறகு.. சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் புரொமோ Cineulagam
