கிளிநொச்சியில் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு (Photos)
கிளிநொச்சியில் 2023 மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பேராளிகள், மாவீரர் பெற்றோர் மற்றும் உறவினர்களால் மாவீர்ர நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (26.11.2023) கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் போராளி வேங்கை தலைமையில் நடைபெற்றுள்ளது.
மரக்கன்றுகள் வழங்கல்
இதன் போது பொதுச் சுடரினை கரும்புலி மாவீரர்களான மேஜர் கதிரவன், லெப் கதிரவன் ஆகியோரின் சகோதரனும் ஈகைச் சுடரினை மாவீரர் இரண்டாம் லெப்டினன் பாபு அவர்களின் தந்தையும் ஏற்றி வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மலர் மாலையினை கரும்புலி மேஜனர் நிலாகரனின் சகோதரியும், மாவீரர்களான தில்லையழகன், புண்ணகைமாறான் ஆகியோரின் சகோதரனும் அணிவித்தனர் தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் இடம்பெற்றதோடு, மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடமைக்காக உயிரை தியாகம் செய்த தமிழ் பொலிஸ் அதிகாரி! நேரில் சென்று அஞ்சலி செலுத்திய உயர் அதிகாரிகள் (Photos)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










