புத்தாண்டில் ஓடும் தொடருந்தில் ஏறி காலை இழந்த நபர்!
ஓடும் தொடருந்தில் ஏற முயன்ற வயோதிபர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான ரிதிதென்னை தொடருந்து நிலையத்தில் வைத்து நேற்று(13) இடம்பெற்றுள்ளது.
இதில், 60 வயதுடைய நபர் ஒருவரே காயமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
காயமடைந்தவர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வயோதிபரின் இடது கால் சத்திர சிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தொடருந்து ரிதிதென்னை நிலையத்தில் நிறுத்தி விட்டு மீண்டும் செல்லும் போது வயோதிபர் ஒருவர் ஏற முற்பட்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan