நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகள் திறப்பு தொடர்பில் வெளியான தகவல்
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை வரை மூடப்பட்டுள்ளன.
இந்தக் காலப்பகுதியில் திறக்கப்படும் மதுபானசாலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தினை தடுக்கும் வகையில் கடந்த 3 ஆம் திகதி முதல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நாட்டில் நேற்று வரை 1,320 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam