இலங்கையில் திடீரென இறங்கிய அமெரிக்க போர் விமானங்கள்! இந்தியாவுக்கு ஆபத்து
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மற்றைய நாடுகளைப் போலவே அமெரிக்காவும் உதவிகளை வழங்கியது.
இந்த நிலையிலே, உதவிகளை ஏற்றி வந்த அமெரிக்க விமானங்கள் இலங்கையிலுள்ள விமான நிலையங்களில் தரையிறங்கின.
இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகளைப் பற்றி அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா இறுதியில் ஒரு வாக்கியத்துடன் அறிக்கையை நிறைவு செய்திருந்தது.
அதாவது,இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய இராணுவ ஒப்பந்தத்திற்கு அமைவாகவே அமெரிக்க விமானங்கள் இலங்கையில் தரையிறங்கியதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்கா இலங்கையுடன் Defence MoU என்ற பெயரில் ஒரு இராணுவ ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் மூலம் எந்த வகையான தாக்கம் இந்தியா மீது ஏற்படும், அமெரிக்காவுக்கு இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் நிராஜ் டேவிட் விளக்கியுள்ளார்.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 22 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri