இறுதி பழிவாங்கலுக்கான போர்! அமெரிக்காவிற்கு விரைவில் மரண அடி: ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டமைக்கு மரண அடி கொடுப்போம் என்று ஈரான் சபாநாயகர் முகமது பாகெர் கலிபாப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரானில் வெடித்துள்ள போராட்டம்
காமேனி கொல்லப்பட்டதால் ஈரானில் போராட்டம் வெடித்துள்ளது. ஈரான் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில்,ஈரான் சபாநாயகர் முகமது பாகெர் கலிபாப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “அமெரிக்காவும் இஸ்ரேலும் சிவப்புக்கோட்டைத் தாண்டிவிட்டன, அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். கமேனியை கொன்ற அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம்.
விளைவுகள் பயங்கரமாக இருக்கும்
ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். இந்தப் போர் ஈரானின் வாழ்வா சாவானப் போர் மட்டுமல்ல, இறுதிப் பழிவாங்கலுக்கான போர்.
நெதன்யாகு மற்றும் ட்ரம்ப்பிற்கு நான் சொல்வது இதுதான்; நீங்கள் கெஞ்சும் அளவிற்கு வலிமைமிக்க அடிகளை உங்கள் மீது தொடுப்போம். அதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என கூறினார்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam