மத்திய கிழக்கின் பதற்றம்: டிரம்பின் மருமகனால் நிறுத்தப்படுமா போர்..! புதிய சூளுரை
தற்போதைய போரை நிறுத்துவதில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் மருமகன் குஷ்னர் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுவதாக ஈரானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் என்.எம்.சஹீட் தெரிவித்துள்ளார்.
எனினும் இஸ்ரேலுக்குப் பாதகமான சூழல் ஏற்படும்போது மட்டுமே அவர் தலையிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இரகசியமான பாதுகாப்பு ஒப்பந்தம்
மேலும் தெரிவிக்கையில், யுத்த காலங்களில் ஈரானிய மற்றும் ரஷ்யப் பிரதிநிதிகள் அடிக்கடி சந்தித்துக் கொள்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே இரகசியமான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று இருக்கலாம். உக்ரைன் போரில் ஈரானிய ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவதும், தற்போது உக்ரைன் அமெரிக்காவிற்கு ஆதரவாக ஈரானியத் தாக்குதல்களை முறியடிக்க உதவுவதும் இந்தப் போரை ஒரு சிக்கலான 'உலகளாவிய மோதலாக' மாற்றியுள்ளது.
தற்போதைய இக்கட்டான சூழலிலும் இந்தியாவின் இராஜதந்திரம் பாரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளுடனும் இந்தியா பேணி வரும் சமநிலையான உறவு காரணமாக, இந்தியாவுக்கு எரிபொருள் கப்பல்களை அனுப்ப ஈரான் சம்மதித்துள்ளது.

இலங்கைக்கும் பலன் கிடைக்க வாய்ப்பு
இந்தியாவுக்கு எண்ணெய் கிடைக்குமானால், அதன் மூலம் இலங்கைக்கும் அந்தப் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தற்போதைய போரை நிறுத்துவதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மருமகன் குஷ்னர் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இஸ்ரேலுக்குப் பாதகமான சூழல் ஏற்படும்போது மட்டுமே அவர் தலையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு உலகளாவிய பிரச்சினையாக இருந்தாலும், இதன் தீர்வு ஒரு குடும்ப முடிவைப் பொறுத்தே அமைந்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri