அம்பாறையில் சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்ப்பு:ஒருவர் கைது (Video)
அம்பாறை - சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்னமலை பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (24.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அன்னமலை பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தேடுதல் நடவடிக்கை

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த தேடுதல் நடவடிக்கையில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் மீட்கப்பட்ட சான்று பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 1 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam