பிரித்தானியாவில் இருந்து உடன் திருப்பி அனுப்பட்ட இந்தியர்..
புதிய one-in one-out ஒப்பந்தத்தின் கீழ் பிரித்தானியா, முதல் புலம்பெயர் நபரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
வெளியாகியுள்ள சர்வதேச செய்திகளின்படி, திருப்பி அனுப்பப்பட்டவர் ஒரு இந்திய பிரஜை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பிரான்ஸ் துறைமுகம் ஒருவரை ஏற்றுக்கொண்டதாக உறுதிப்படுத்தியிருந்தாலும், அவரது தேசியத்தை வெளியிட மறுத்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.
இந்த ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு வந்தபோது கையெழுத்திடப்பட்டது.
புதிய திட்டம்
அதன்படி, 'ஒருவர் வெளியேறினாரல் ஒருவர் உள்ளே' என்ற அடிப்படையில் பிரான்சில் உள்ள சரிபார்க்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை பிரித்தானியா ஏற்கும் திட்டம் இதுவாகும்.
இதற்கமைய, ஓகஸ்ட் மாதத்தில் சிறிய படகில் பிரித்தானியாவிற்கு வந்த அந்த நபர், ஒரு வணிக விமானத்தில் பிரான்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது, மனித கடத்தல் குற்றசாட்டுகளுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். மேலும், பிரித்தானிய அரசு எல்லை பாதுகாப்பிற்காக 100 மில்லியன் பவுண்டு நிதியை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
