சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்! அமல் சில்வாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (29) இந்த பிணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
அமல் சில்வா, போலி ஆவணங்களை பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சொகுசு வாகனங்களுடன் வலானை ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று (28) கைது செய்யப்பட்டார்.
விசாரணை
இந்த வாகனங்கள் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, போலி ஆவணங்களை பயன்படுத்தி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலி எண்களில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது லேண்ட் ரோவர் மற்றும் மிட்சுபிஷி ஜீப் வகைகளை சேர்ந்த 3 வாகனங்களும் மீட்கப்பட்டன.
பொலிஸார் நடத்திய ஆரம்ப விசாரணையில், இந்த வாகனங்கள் போலி ஆவணங்களுடன் அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களின் பதிவு எண்களில் பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.



