கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: அவசர சிகிச்சைப் பிரிவில் இருவர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம்(29.09.2025) கிளிநொச்சி தட்டுவான் கொட்டியில் காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பாழடைந்த வீடொன்றில் வெடிக்காத நிலையில் இருந்த குண்டை கழற்ற முயன்ற போது திடீரென ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதில் கச்சை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கொடிகாமம் சேர்ந்த ஒருவரும் 20 மற்றும் 50வயதுடையவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 21 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan