முல்லைத்தீவில் முன்னணி விளையாட்டு வீரர்களை புறக்கணிப்பது தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

Mullaitivu Northern Province of Sri Lanka Sports
By Uky(ஊகி) May 09, 2024 11:27 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவில் (Mullaitivu) அலையோசை கழக முன்னனி விளையாட்டு வீரர்களை வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழகத்தினர் புறக்கணித்தமை தொடர்பில் விளையாட்டு ஆர்வலர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டத்தில் முன்னனி விளையாட்டுக் கழகங்களாக அலையோசை விளையாட்டுக் கழகமும் செந்தமிழ் விளையாட்டுக் கழகமும் உள்ளன.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அழைக்கப்பட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கிடையிலான சுற்றுத்தொடர் ஒன்றினை செந்தமிழ் விளையாட்டுக் கழகம் நடத்தியிருந்தது. இந்த உதைபந்தாட்ட போட்டியின் போது உடுப்புக்குளம் அலையோசை விளையாட்டுக் கழகமும் அழைக்கப்பட்டிருந்தது.

டயானா கமகே விரைவில் கைது செய்யப்படலாம்..!

டயானா கமகே விரைவில் கைது செய்யப்படலாம்..!


மறுக்கப்பட்ட அனுமதி   

போட்டி நடைபெறவுள்ள தினத்தில் வற்றாப்பளையில் அமைந்துள்ள செந்தமிழ் விளையாட்டுக் கழக மைதானத்தில் கூடியிருந்த போது அலையோசை விளையாட்டுக் கழகத்தின் அன்றைய போட்டியில் விளையாடவிருந்த அணியின் அங்கம் வகித்த முன்னனி விளையாட்டு வீரர்கள் ஐவரை உதைபந்தாட்ட போட்டியில் அணிக்காக பங்குபற்ற அனுமதிக்க முடியாது என செந்தமிழ் விளையாட்டுக் கழகம் மறுத்திருந்ததாக அலையோசை விளையாட்டுக் கழகம் சார்பாக பேசியிருந்தவர் குறிப்பிட்டிருந்தார்.

allegation-raised-regarding-neglect-sportspersons

இந்த ஐந்து வீரர்களும் கழகத்தின் விளையாட்டு அணியின் முன்னனி விளையாட்டு வீரர்கள்.

இந்நிலையில் இவர்களை விளையாடுவதற்கு அனுமதி மறுத்தமைக்கான காரணம் என்ன என்பதை உத்தியோகப்பூர்வமாக எடுத்துரைக்க செந்தமிழ் விளையாட்டுக் கழகம் மறுத்துவிட்டது.

இது தொடர்பில் அனுமதி மறுத்தமைக்கான காரணத்தினை உத்தியோகப் பூர்வமாக தருமாறு கேட்ட போது செந்தமிழ் விளையாட்டுக் கழகம் தர மறுத்திருந்தது.

அலையோசை விளையாட்டுக் கழக தலைவரும் இதர உறுப்பினர்களும் சம்பவ இடத்தில் குழுமியிருந்த வேளை பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் தங்கள் அணியினரும் தலைவரும் அசௌகரியங்களுக்கு ஆளானதாக அலையோசை விளையாட்டுக் கழகம சார்பாக கருத்துரைத்த மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமற்ற நடைமுறை 

இந்த போட்டியானது அழைக்கப்பட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கிடையிலான போட்டி என்பதால் போட்டிக்கான நேர ஒழுங்குகள் தயாரிக்கப்படல் வேண்டும்.

அணியில் கலந்து கொள்ளவுள்ள வீரர்களின் தகவல்களை சேகரித்து விளையாட முடியாத வீரர்கள் தொடர்பான விபரங்களை முன்கூட்டியே அந்த அணிக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.

allegation-raised-regarding-neglect-sportspersons

போட்டிக்கான நேர ஒழுங்குகள் செய்யப்பட்டு எந்த அணி எந்த அணியோடு போட்டியிட வேண்டும் என்று தீர்மானித்துச் செயற்பட்ட செந்தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு அணி வீரர்கள் தொடர்பில் முன்னரே கவனமெடுக்க முடியாதது ஏன் என விளையாட்டு இரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

சிறந்த நிர்வாக கட்டமைப்புள்ள விளையாட்டுக் கழகம் விளையாட்டு வீரர்கள் தொடர்பில் விளையாடுவதற்கு அனுமதி வழங்குதல் அல்லது வழங்காமை தொடர்பிலான எண்ணக்கருவைக் கொண்டிருக்கும் எனின் போட்டியிடும் அணிகளுக்கிடையில் விளையாடுவதற்காக தெரிவாகும் வீரர்களின் விளையாடுவதற்கான அனுமதிகள் தொடர்பில் கவனமெடுத்து அவற்றை போட்டிக்கு முன்னரே சீர் செய்திருக்க வேண்டும்.

அறிவுறுத்தல் இல்லை  

அலையோசை விளையாட்டுக் கழகத்திற்கு அதன் அணி வீரர்கள் ஐவர் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அல்லது அங்கீகரிக்கப்பட்ட முறையில் எழுத்து மூலமாக எந்தவொரு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை என அவ்வணி சார்ந்த உயர்மட்டக் குழுவினரின் சார்பில் பேசிய ஒருவர் இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.

allegation-raised-regarding-neglect-sportspersons

போட்டி அணிக்காக வீரர்களைத் தெரிவு செய்யும் போது சிறந்த விளையாட்டு வீரர்களை தெரிவு செய்து அனுப்ப வேண்டும்.போட்டி நடைபெறும் தினத்தில் வந்து ஐவர் விளையாட முடியாது என்று அறுவுறுத்துவது நாகரிகமற்ற செயற்பாடு என இது தொடர்பில் விளையாட்டுக்களின் தன் இளமைக்காலத்தினை அதிகளவில் பயன்படுத்தியிருந்த வயோதிபர் ஒருவருடனான கலந்துரையாடலில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

திறமையான விளையாட்டு வீரர்களின் மன எழுச்சியை சிதைக்கும் வகையில் கழகங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கும் போது வளமான உதைபந்தாட்ட ஆளணியை முல்லைத்தீவு மாவட்ட அணிக்குள் உள்ளீர்க்க முடியாத சூழல் தோன்றுவதை தடுக்க முடியாது என்பது திண்ணம்.

முல்லைத்தீவில் யானைகள் நடமாட்டம் : பாதிப்புக்குள்ளாகும் விளைச்சல்கள்

முல்லைத்தீவில் யானைகள் நடமாட்டம் : பாதிப்புக்குள்ளாகும் விளைச்சல்கள்

அம்பாறையில் அதிகரித்துள்ள முதலைகளின் நடமாட்டம்

அம்பாறையில் அதிகரித்துள்ள முதலைகளின் நடமாட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US