கடலட்டைப் பண்ணைகள் அனைத்தையும் சட்ட ரீதியாக மாற்றிக் கொள்ளவும்: டக்ளஸ் தேவானந்தா
மக்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கடலட்டைப் பண்ணை செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சராக நான் இருக்கும் வரையில், குறுகிய நோக்கங்களுக்காக யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாச்சிக்குடா மற்றும் இரணைதீவு பகுதியில் நேற்றையதினம் (04.11.2022) நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன்னுடைய காலப் பகுதிக்குள்ளேயே, கடலட்டைப் பண்ணைகள் அனைத்தையும் சட்ட ரீதியானவையாக மாற்றிக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கள்
நாச்சிக்குடா மற்றும் இரணைதீவு பகுதியில் கடலட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளவர்களில் சுமார் 80 பண்ணையாளர்களுக்கு பூநகரிப் பிரதேச செயலகத்தினால் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பாக மாவட்டத்திற்கான பொறிமுறையை உருவாக்குவதற்காகன கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதற்கமைய, கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம் உட்பட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த விசேட குழு ஒன்றினை, உருவாக்கி அவற்றைக் கட்டுப்படுத்தற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இந்த குழு அமைக்கப்படவுள்ளது.
விவசாய நடவடிக்கைகள்
உணவுப் பாதுகாப்பினையும், போஷாக்கினையும் உறுதிப்படுத்தும் வகையில் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பது மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கும் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டிருந்நமை குறிப்பிடத்தக்கதது.
மேலும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி
பிரதிநிதிகள் அமைச்சர் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமது எதிர்கால
நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 18 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
