நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படுகின்றன
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடப்படுகின்றன.
நாட்டில் தீவிரமடைந்து வரும் கோவிட் தொற்று காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக மேல் மாகாண பாடசாலைகள், வடமேல் மாகாண பாடசாலைகள், சபரகமுவ மாகாண பாடசாலைகள், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகள் மற்றும் அனுராதபுர கல்வி வலயத்தின் 13 பாடசாலைகள் உள்ளிட்ட மேலும் பல பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
எனினும், தற்போது அதிகரித்து வரும் கோவிட் தொற்றின் அபாயம் காரணமாக அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மூடப்படுகின்றன.
மேலும், கோவிட் பரவல் தீவிரம் அடைவதன் காரணமாக வரும் 30ஆம் திகதி வரை பிரத்தியேக வகுப்புக்களை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
