நாட்டை மீட்ட தலைவரை சிறையில் தள்ளுவதா..! ரணிலின் கைதுக்கு எதிராக அலி சப்ரி போர்க்கொடி
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய சந்தர்ப்பத்தில் நாட்டைச் சரிவில் இருந்து ரணில் விக்ரமசிங்கவே மீட்டார், அப்படியான ஒரு தலைவரை அரசியல் ரீதியில் பழிவாங்கும் வகையில் சிறையில் அடைப்பதா என முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு அலி சப்ரி கடும் எதிர்ப்பு வெளியிட்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வருத்தமளிக்கும் விடயம்
அத்துடன் சமூக ஊடகச் செயற்பாட்டாளர் ஒருவர் கணித்ததாகக் கூறப்படுவதற்கு அமைய, ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைக் கைது செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றி சமூக ஊடகச் செயற்பாட்டாளர் சுதத்த திலகசிறிக்கு எவ்வாறு முன்கூட்டியே தெரியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam