மக்களின் முன் தோன்றிய அலி கமேனி! அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை
அமெரிக்கா கூறுவதைப் போல நாம் ஒருபோதும் சரணடைய மாட்டோம் என ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பின்னர் முதன்முறையாக இன்று(26) மக்கள் முன் வந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பதற்றமனான சூழ்நிலையின் போது ஈரான் மக்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிய விலை
மேலும், ஈரான் ஒரு போதும் சரணடையாது எனவும் எமது நாடு முதுகெலும்பு உள்ள நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் போன்ற ஒரு சிறந்த தேசத்திற்கு, சரணடைதல் தொடர்பில் குறிப்பிடுவதே ஒரு அவமானம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈரான் பிராந்தியத்தில் மேலும் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டால் அமெரிக்கத் தளங்கள் அதற்கு பாரிய விலையை கொடுக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam
