பரீட்சை மேற்பார்வை அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை (G.C.E. A/L) மேற்பார்வை பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட மேற்பார்வை அதிகாரிகளுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இந்த தடையை விதித்துள்ளது.
இதன்படி பரீட்சை மேற்பார்வை கடமையில் ஈடுபட்டுள்ள பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி தவிர்ந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகள் பரீட்சை நிலையத்திற்குள் அலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்பார்வை நடவடிக்கைகள்
பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பரீட்சை நிலைய மேலதிக பொறுப்பதிகாரி ஆகியவர்களுக்கு மட்டுமே அலைபேசி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பரீட்சை நடைபெறும் காலத்தில் மேற்பார்வை நடவடிக்கைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி பரீட்சை மேற்பார்வை பணிகளுக்கு பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிமனைகளின் அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர்.
ஓர் மேற்பார்வை அதிகாரி 15 நாட்களில் 20 பரீட்சை நிலையங்களை மேற்பார்வை செய்ய வேண்டும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு News Lankasri

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை News Lankasri

கோடிகளில் சம்பளம் வாங்கும் ரஜினி முதன்முதலில் நாயகனாக நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? Cineulagam
