நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை! வாக்குமூலத்தில் கசிந்த தகவல்: முக்கிய குற்றவாளி நாட்டிலிருந்து தப்பியோட்டம்

Sri Lanka Police Bandaranaike International Airport Colombo Crime Branch Criminal Investigation Department
By Dhayani Feb 22, 2026 07:46 AM GMT
Report

 அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் 12 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன, இதன் விளைவாக, ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையை உலுக்கிய இரட்டைக் கொலை: துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ வீரர்..! அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்

இலங்கையை உலுக்கிய இரட்டைக் கொலை: துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ வீரர்..! அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்

உடந்தையாக இருந்த 06 சந்தேகநபர்கள் கைது

அதன்படி, கொலையில் துப்பாக்கிகளை கொண்டு சென்று வழக்கறிஞரின் வாகனம் குறித்து துப்பு வழங்கிய அதுருகிரியவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களும், அதை ஒருங்கிணைத்த "பொல்கசோவிட்ட திலா"வும் முதற்கட்ட விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டனர்.

நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை! வாக்குமூலத்தில் கசிந்த தகவல்: முக்கிய குற்றவாளி நாட்டிலிருந்து தப்பியோட்டம் | Akuregoda Shooting Investigation Update 

இதேபோல், நேற்று (22) பிற்பகல் கஹதுவவின் எத்கந்துர பகுதியில் இந்த சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த 06 சந்தேக நபர்களை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையின் தெற்கு மாகாண சிறப்பு நடவடிக்கை பிரிவு கைது செய்தது.

இதற்கிடையில், இந்த கொலையில் ஈடுபட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை பன்னிபிட்டிய ஹோட்டலுக்கு அழைத்து வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய்லாந்திற்கு தப்பிச் சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சூழலில், இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் நேற்று மாலை 6.20 மணியளவில் அம்பலாங்கொடை, தெல்துவயில் கைது செய்யப்பட்டார். இதன்போது விசாரணைகளில் இந்த சந்தேக நபர்தான் T-56 துப்பாக்கியால் வழக்கறிஞரைச் சுட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஆபத்தான இலங்கையர்கள்! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஆபத்தான இலங்கையர்கள்! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

பெருந்தொகை பணம் வழங்கல்

கரந்தெனியே சுத்தா தொலைபேசி மூலம் தனக்கு வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தக் கொலையும் நடந்ததாக சந்தேகநபர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை! வாக்குமூலத்தில் கசிந்த தகவல்: முக்கிய குற்றவாளி நாட்டிலிருந்து தப்பியோட்டம் | Akuregoda Shooting Investigation Update

இந்த கொலைக்குப் பிறகு சுத்தா தனக்கு ஒரு இலட்சம் ரூபாயையும் ஹெரோயினையும் கொடுத்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

கரந்தெனியே சுத்தா முன்பு தனக்குத் தேவைப்படும் போதெல்லாம் பணம் வழங்கியுள்ளார் என்பதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அதன்படி, கரந்தெனியே சுத்தாவுக்கு வாடகைக் கொலையாளியாக அவர் செயல்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.   

அக்குரேகொடவில் இரட்டைக்கொலை! மேலும் நால்வர் கைது

அக்குரேகொடவில் இரட்டைக்கொலை! மேலும் நால்வர் கைது

பாதாள உலக கும்பலுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த நபர் கைது

பாதாள உலக கும்பலுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த நபர் கைது


மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US