பாதாள உலக கும்பலுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த நபர் கைது
பாணந்துறை பிரிவு குற்றப்புலனாய்வுப்பிரிவு, இரண்டு முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான 'டுபாய் சுத்தா' மற்றும் 'பாணந்துறை குடு சலிந்து' ஆகியோரின் நெருங்கிய உதவியாளரை கைது செய்துள்ளது.
நேற்று (19) இரவு முன்னெடுக்கப்பட்ட சோதனையில் பாணந்துறை, லெஸ்லி குணவர்தன மாவத்தையைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 A4 அளவிலான காகிதத்தாள்கள் பறிமுதல்
சந்தேகநபர் நீண்ட காலமாக பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் அவரது வீட்டை சோதனை செய்துள்ளனர்.

இந்த சோதனையின் போது அவரது கால்சட்டைப் பையில் 103 கிராம் மற்றும் 300 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் வசம் இருந்து போதைப்பொருள் சுற்ற பயன்படுத்தப்படும் 23 A4 அளவிலான காகிதத் தாள்களையும் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனித்துவமான அடையாளம்
ஒவ்வொரு தாளிலும் சுமார் ஒரு அங்குல அளவுள்ள 63 சிறிய பெட்டிகள் இருந்தன, மேலும் ஒவ்வொரு பெட்டியிலும் 'பருந்து' உருவம் பொறிக்கப்பட்டு ரூ. 650/- விலை குறிப்பிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருட்களை பொதி செய்யும் போது நுகர்வோரால் அடையாளம் காணக்கூடிய ஒரு தனித்துவமான அடையாளமாக இது பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri