நாட்டை பரபரப்பாக்கிய இரட்டைக் கொலை: துபாயில் மறைந்துள்ள குற்றவாளிகளின் நண்பர் ஒப்புக்கொண்டுள்ள விடயம்
அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (18.02.2026) நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.
கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு சகோதரர்களையும் விளக்கமறியலில் வைக்க கடுவல நீதவான் அருண புத்ததாச நேற்று உத்தரவிட்டதை தொடர்ந்து, சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு இருவரும் இரகசிய வாக்குமூலம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, நீதவான் அனுமதியளித்த பிறகு, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இரகசிய வாக்குமூலம் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அநுரவின் ஒரேயொரு கையெழுத்தில் மாறும் 12 பேரின் தலையெழுத்து! மரணத்தின் பிடியில் இருப்பவர்களுக்காக சென்ற அவசர செய்தி
இதனை தொடர்ந்து அதுருகிரிய, ரத்துவிலவத்தை, பாரடைஸ் பகுதியைச் சேர்ந்த சனோஜ் கோகில லியனாராச்சி மற்றும் நதுன் கவீஷா லியனாராச்சி ஆகிய குறித்த இரு சகோதரர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திலா ஒப்புக்கொண்டுள்ள விடயம்
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்படும் பொல்கசோவிட்ட திலா, விசாரணை அதிகாரிகள் முன் பல விடயங்களை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி “சம்பவம் நடந்த நாளில், தற்போது தலைமறைவாக உள்ள மோதர நிபுனாவின் குழு, கொட்டிகாவத்தை பகுதியில் உள்ள திலாவிடம் துப்பாக்கிகளை கொடுத்துள்ளனர். பின்னர், அவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இரண்டு சகோதரர்களும் துப்பாக்கிகள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு வாடகைக்கு எடுக்கப்பட்ட காரில் அகுரேகொடவிற்கு வந்துள்ளனர். அவர்கள் பிற்பகல் 3.30 மணிக்கு அகுரேகொடவிற்கு வந்து, துப்பாக்கிச்சூடு நடத்த வந்த, காரில் இருந்த இருவருக்கு துப்பாக்கிகளைக் கொடுத்ததாக” ஒப்புக்கொண்டுள்ளார்.

துப்பாக்கிகளைக் கொடுத்த பிறகு, திலாவும் சந்தேகத்திற்குரிய இரண்டு சகோதரர்களும் ராபர்ட் குணவர்தன மாவத்தை வழியாக வந்து, வழக்கறிஞரும் அவரது மனைவியும் செல்லும் வழி குறித்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
துபாயில் மறைந்துள்ள குற்றவாளிகள்
அங்கு, டிலா என்ற நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, "அவர்கள் இப்போது வருகிறார்கள்" என்று கூறியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துபாயில் மறைந்திருக்கும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களான மல்வானே டுட்டு மற்றும் மோதர நிபுனா ஆகியோரின் நண்பரே போல்கசோவிட்ட டிலா என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 13ஆம் திகதி அக்குரேகொடவில் உள்ள முப்படைத் தலைமையகத்திலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பல்பொருள் அங்காடி வாகன நிறுத்துமிடத்தில் ஒரு சட்டத்தரணியும், அவரது மனைவியும் காரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam