சூடுபிடிக்கும் சபை அமர்வு! நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தற்போது வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இன்று (19) நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த தகவலை இன்று (19) நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் விபரங்கள்
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்திர கொடுப்பனவு ரூ. 54,285 வழங்கப்படுகிறது.மாதாந்திர பொழுதுபோக்கு கொடுப்பனவாக ரூ. 1,000 வழங்கப்படுகிறது.

மாதாந்திர சாரதி கொடுப்பனவு ரூ. 3,500 ஆகும், மேலும் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் மூலம் ஒரு சாரதி பெறப்பட்டால், அந்த எம்.பி.க்கு சாரதி கொடுப்பனவு வழங்கப்படாது என்றும் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார்.
மேலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ. 50,000 தொலைபேசி கொடுப்பனவும் ரூ. 15,000 போக்குவரத்து கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது.
அலுவலக கொடுப்பனவு ஒரு இலட்சம் ரூபாயாகவும், கூட்டக் கொடுப்பனவாக வழங்கப்படும் தொகை ஒரு நாளைக்கு ரூ. 2,500 ஆகவும் உள்ளது.
எரிபொருள் கொடுப்பனவு
நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு ஒரு நாளைக்கு ரூ. 2,500 மற்றும் குழு கொடுப்பனவாக ஒரு நாளைக்கு ரூ. 2,500 வழங்கப்படும். நாடாளுமன்றக் கூட்டங்கள் இல்லாத நாட்களில் நடைபெறும் குழு கூட்டங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 2,500 வழங்கப்படும்.

ஒவ்வொரு எம்.பி.யும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு உள்ள தூரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சந்தையில் ஒரு லிட்டர் டீசலின் அங்கீகரிக்கப்பட்ட விலையின் அடிப்படையில் எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படும் .
தேசியப் பட்டியல் எம்.பி.க்களுக்கு 419.76 லிட்டர் டீசலின் அடிப்படையில் எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam