அக்கரைப்பற்றில் நள்ளிரவில் பதற்றம்..! சிறுவர்கள் ஓட்டிசென்ற கார் மோதி விபத்து - ஆபத்தான நிலையில் இருவர்
அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அருகில் உள்ள வீதியில் இரண்டு சிறுவர்கள் காரை வேகமாக ஓட்டிய வந்து இருவர் மீது மோதியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாரிடம் வினவிய போது பொலிஸார் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
முடிவுக்கு வந்தது காங்கிரஸின் 59 ஆண்டு கால காத்திருப்பு - நாளை இடம்பெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க தருணம்
மேலதிக விசாரணை
மேலும் விபத்துக்குள்ளாகிய இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் எவ்வாறு காரை எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்த நிலையில், உண்மைக் குற்றவாளிகளான சிறுவர்களைக் காப்பாற்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.


