அபாய கட்டத்தில் நாடு - சைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
ஆலய திருவிழாக்களை ஒத்திவைக்குமாறு அல்லது பக்தர்கள் இன்றி நடத்துமாறு அகில இலங்கை சைவ மகா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும்,
அண்மைய நாட்களாக கோவிட் பெருந்தொற்று வேகம் எடுத்துள்ள நிலையில் இலங்கையில் தினமும் 100 மரணங்கள் பதிவாகி வரும் நிலையில் சைவத் திருக்கோயில்களில் சுகாதார நடைமுறைகளைப் புறக்கணித்து பலர் ஒன்றுகூடி வருவதும் அதனால் வரும் விரும்பத்தகாத விளைவுகளும் கவலை தருகின்றன.
அங்கொன்றும் இங்கொன்றுமாக பக்கச்சார்பான கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆதங்கம் எழுந்தாலும் இப்போது உள்ள நிலைமையின் தீவிரத்தை சைவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் எது எவ்வாறாயினும் டெல்டா பரவல்/ அதிகரித்த தொற்றுக்கள்/ மரணங்கள்/ ஒட்சிசன் தேவைப்பாடு/ நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் என நாடு மிகவும் அபாய கட்டத்தில் உள்ள இந்நேரம் பெருந் திருவிழாக்கள்/ ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பது காலத்தின் கட்டாயமாகும்.
இந்த முக்கிய கடமையைத் திருக்கோயில்கள் சரிவர ஆற்ற அனைத்து சைவப் பெரியார்களும் அமைப்புக்களும் குரல் கொடுத்து ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியமாகும்.
தவறின் கோவிட் உயிரிழப்புகளுக்குச் சமயமும் பழி ஏற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் விநயமாகச் சுட்டி நிற்கின்றோம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
