வானிலிருந்து விதைகளை தூவிய இலங்கை விமானப்படையினர்
இலங்கை விமானப்படையினர் முன்னெடுத்து வரும் வானில் இருந்து விதைகளை தூவும் திட்டத்தின் 5வது கட்டம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் ஆலோசனையின்படி அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பியம்பலாண்டுவ பிரதேசத்தில் வத்தேகம கெபிலித்த வனப்பகுதியின் 75 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளடங்கும் வகையில், மரங்களுக்கான விதைகள் தூவப்பட்டுள்ளதாகவும் 80 ஆயிரம் விதைகள் தூவப்பட்டதாகவும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விமானப்படையின் வீரவில முகாமை அடிப்படையாக கொண்டு விமானப்படை ஹெலிக்கொப்டர் மூலம் விதைகள் தூவப்பட்டுள்ளன.
2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை காடுகளின் பரப்பளவை 27 வீதம் முதல் 32 வீதம் வரை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் எனவும் விமானப்படையினர் கூறியுள்ளனர்.










அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
