இலங்கையில் கனிம வளங்களை கண்காணிக்கும் விமானங்கள்!
இலங்கையின் கனிம வளம் தொடர்பில் ஆராய்வதற்காக விமான ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேருவில, சிலாபம், பனிரென்டாவ பிரதேசத்தில் அமைந்துள்ள கனிமங்கள் மூலம் இலங்கைக்கு தேவைாயன இரும்பு மற்றும் செப்பு என்பன பெற்றுக் கொள்ள முடியும் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் வல்பொல தெரிவித்துள்ளார்.
1971ஆம் ஆண்டு சேருவில பகுதியிலுள்ள ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட நில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நூற்றுக்கு 40 - 50 வீதமான அளவு இரும்பு மற்றும் நூற்றுக்கு ஒரு வீதம் செப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தலைவர் குறிப்பிட்டுள்ளாார்.
விரைவாக ஆராய்ந்து அதனை அகழ்வு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளளார்.
கனிம வள ஆய்வின் ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.