24 மணிநேரத்தில் பதிவான நிலவரம்: மோசமான விளைவை ஏற்படுத்துமென எச்சரிக்கை
நாட்டில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரக் குறியீட்டின் படி நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் இந்த நிலைமை பதிவாகியுள்ளது.
அதன்படி இன்றைய தினம் கொழும்பின் காற்று மாசு 127 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலை உணர்திறன் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுக் குறியீடு
அத்துடன் காலி கராப்பிட்டியவில் 90 ஆகவும், புத்தளத்தில் 88 ஆகவும், குருநாகல் மற்றும் அனுராதபுரத்தில் 86 ஆகவும் காற்று மாசு சுட்டெண் பதிவாகியுள்ளது.
மேலும் நாட்டின் காற்று மாசுக் குறியீடு 50ஐத் தாண்டியிருப்பதால், மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், இது குறித்து கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஒரு பக்கம் சூட்டிங், அதே நேரத்தில் ICUவில் இறந்த கணவர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகையின் சோக கதை Cineulagam
ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷ் இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி: பிரித்தானியா அதிரடி News Lankasri
ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று சூப்பர்ஹிட் திரைப்படங்கள்... இதோ விவரம் Cineulagam