அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்! பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்
சென் பிரான்சிஸ்கோவிலிருந்து(San Francisco) மும்பைக்கு, கொல்கத்தா வழியாக பயணித்த ஏர் இந்தியா விமானம் (AI180), தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் பயணிகள் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று(17) அதிகாலை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
Air India flight Flight AI180 from San Francisco to Mumbai via Kolkata suffered a technical snag in one of its engines requiring passengers to be deplaned during a scheduled halt at the city airport on Tuesday.
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) June 17, 2025
pic.twitter.com/uo1ab6oHPw
தொழில்நுட்பப் கோளாறு
விமானத்தின் இடது என்ஜினில் தொழில்நுட்பப் கோளாறு ஏற்பட்டதால், கொல்கத்தாவில் இருந்து மும்பை நோக்கி புறப்பட வேண்டிய விமானம் தாமதமானது என இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,
ஏர் இந்தியா AI180 விமானம், சென் பிரான்சிஸ்கோவிலிருந்து திட்டமிட்டபடி புறப்பட்டது.
ஆனால், இரவு 12:45 மணிக்கு கொல்கத்தா நோக்கி வந்தவுடன் இடது என்ஜினில் பிரச்சனை ஏற்பட்டது.
இதன் காரணமாக, 4 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் தரையிறக்க முடியாமல் இருந்துள்ளது. மேலும், அதிகாலை 5:20 மணியளவில், பயணிகளை விமானத்தில் இருந்து இறக்க அறிவிக்கப்பட்டது.
விமானத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என விமானி தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா விமானம்
விமான நிலைய தரையிலிருந்து எடுத்த காணொளியில், ஏர் இந்தியா விமானத்தின் இடது என்ஜினை, தரையில் நிறுத்தப்பட்ட நிலையில், நிலையபணியாளர்கள் பரிசோதனை செய்யும் காட்சி காணப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு ஐந்து நாட்கள் முன்னே தான், ஏர் இந்தியா விமானம் AI-171, அஹமதாபாத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்திலிருந்து லண்டன் சி விமான நிலையம் நோக்கி புறப்பட்டு, விமானம் புறப்பட்ட சில விநாடிகளுக்குள்ளே, BJ மெடிக்கல் கல்லூரி மாணவர் விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
அந்த விமானத்தில், 230 பயணிகள், 10 விமான பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் உட்பட மொத்தம் 242 பேர் இருந்தனர்.
இதில், பிரிட்டிஷ் பிரஜையான விஷ்வாஸ் குமார் ரமேஷ் தவிர மற்ற அனைவரும் தீயில் எரிந்து உயிரிழந்தனர்.
இது போன்ற நிகழ்வுகள் விமானப் பயணிகளிடையே பாதுகாப்பு மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam
