உலகையே உலுக்கிய விமான விபத்திற்கான காரணம்: அனுபவத்தில் அனுமானித்த தமிழ் விமானி
உலகையே உலுக்கிய விமான விபத்தொன்று கடந்த 12ஆம் திகதி இந்தியாவிலுள்ள அகமதாபாத்தில் இடம்பெற்றது.
விமானத்தில் 242 பயணித்த நிலையில் 241 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.
அது மட்டுமில்லாமல் குறித்த விமானம் மருத்துவ விடுதியில் விழுந்ததில் விடுதி முற்றிலும் சேதமானதுடன் அங்கிருந்தவர்களும் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். உயிர்பிழைத்த ஒருவர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றார்.
எனினும் அதனைதொடர்ந்து ஏர் இந்தியாவிற்கு சொந்தமான விமானங்கள் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
அதுமட்டுமில்லாமல் குறித்த விமான விபத்தை பற்றி சமூக ஊடகங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் விமானத்தை பற்றியும் விமான விபத்தை பற்றியும் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய நோக்கில் 35000 மணித்தியாலங்கள் பயணித்த தமிழரான கேப்டன் ஸ்ரீ சேகரத்தை எமது ஊடகம் தொடர்புக்கொண்டது.
விமான விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்றாலும், அவை அனைத்தும் தற்செயலாக நடைபெற்றது என அவர் தெரிவித்தார்.
மேலும், மலேசிய விமானம் தொடர்பிலும் தனது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க..

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
