பேருந்து - டிப்பர் மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்
திருகோணமலையில் இருந்து புல்மோட்டை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துடன் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.
குறித்த விபத்து நேற்று(10.08.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
வாகன விபத்து
குறித்த பேருந்து புடவைக்கட்டு பகுதியில் பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த மணல் ஏற்றிய வந்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின் பகுதியில் பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தின் போது பேருந்தில் பயணிகள் இருந்தபோதிலும், எவருக்கும் காயங்கள் எதுவுமின்றி தெய்வாதீனமாக அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.

எனினும், மோதிய வேகத்தில் பேருந்தின் பின் பகுதியும், டிப்பர் வாகனத்தின் முன் பகுதியும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த புல்மோட்டைப் பொலிஸார், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.