சீரற்ற காலநிலை காரணமாக மன்னாரில் விவசாய செய்கை பாதிப்பு
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாகவும் அதிக மழை காரணமாகவும் 7603 ஹெக்டேர் விவசாய செய்கை அழிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இலுப்பைகடவை கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட 1100 ஹெக்டேர் விவசாய நிலங்களும் மாந்தை பகுதியில் 1168, நானாட்டான் 768 ஹெக்டேயருமாக ஒட்டு மொத்தமாக 7603 ஹெக்டேர் விவசாய செய்கை அழிவடைந்துள்ளன.
இம்முறை மன்னார் மாவட்டத்தில் காலபோக செய்கைக்கு என 11776 ஹெக்டேர் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 4173 ஹெக்டேர் விவசாய செய்கை மாத்திரம் தற்போது பகுதியளவில் காப்பாற்றப்பட்டுள்ளன.

கடன் தள்ளுபடி
இந்தநிலையில், இம்முறை விவசாய செய்கைக்காக பல விவசாயிகள் அரச மற்றும் தனியார் வங்கிகளிலும், கிராம மட்ட அமைப்புகளிடமும் கடன்களை பெற்றுள்ள நிலையில், அவற்றை மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் தள்ளுபடி செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan