தென்னக்கோனின் விசாரணைக்கு உதவ இரண்டு பிரதிநிதிகளை நியமித்த சட்டமா அதிபர்
பதவி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்கும் விசாரணைக் குழுவிற்கு உதவ, மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் மற்றும் துணை மன்றாடியார் நாயகம் ராஜித பெரேரா ஆகியோரை சட்டமா அதிபர் பரிந்துரைத்துள்ளார்.
இந்தநிலையில், தென்னக்கோனின் அதிகார துஸ்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட குழு, அதன் தொடர்ச்சியான விசாரணைக்கு ஆதரவளிக்க ஒரு பொலிஸ் புலனாய்வுக் குழுவை பரிந்துரைக்குமாறு, பதில் பொலிஸ் அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோரிக்கை
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுவின் இரண்டாவது கூட்டத்தின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த குழு, அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மேலும் முடிவுகளை எடுப்பதற்காக, 2025 ஏப்ரல் 28 ஆம் திகதியன்று மீண்டும் கூடும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.