நாடு ஆபத்தான நிலையை நோக்கி நகர்வதாக எச்சரிக்கை
இலங்கையில் முதல் மற்றும் இரண்டாவது அலைகளுடன் ஒப்பிடும் போது கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட சிரேஷ்ட பொதுமக்கள் மத்தியில் வீடுகளில் நிகழ்ந்த இறப்புகள் அதிகம் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் செயலாளர் கலாநிதி செனல் பெர்னாண்டோ இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த ஒன்றரை மாதங்களில், குறிப்பாக புத்தாண்டுக்குப் பிறகு, 60% கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன. 2020 மார்ச் முதல் கோவிட் இறப்புகளுடன் ஒப்பிடும்போது, தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் மூன்றாவது அலையின் போது 60% இறப்புகள் பதிவாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
முதல் மற்றும் இரண்டாவது கோவிட் அலைகளின் போது இறந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, இப்போது வைரஸ் பரவல், ஆபத்தான அதிகரிப்பைக் காட்டுகிறது. "73 முதல் 75% வரை இறப்புகள் 60 அகவைக்கு மேற்பட்டவர்களிடையே நிகழ்ந்தன.
தற்போதைய முடக்கல் காலத்தில் கூட, 60 அகவைக்கும் மேற்பட்டவர்களின் இறப்பு அதிகரித்துள்ளது. அதாவது வைரஸ் வீடுகளுக்குள் படையெடுத்துள்ளமையை இது உணர்த்துகிறது.
முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது பெரும்பாலான இறப்புகள் வீடுகளிலிருந்து பதிவாகவில்லை என்று செ னல் பெர்னாண்டோ கூறினார்.
பயணக் கட்டுப்பாடுகள் அதிகபட்சமாக 90% ஆக வரம்பிட விதிக்கப்பட்டன. ஆனால் அது 60% வரை மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வீடுகளிலிருந்து வெளியே வர முடியும் என்பதை இது காட்டுகிறது.
இந்த நடைமுறையின் மூலம், வைரஸ் அவர்களின் வீடுகளுக்கு எடுத்துச்
செல்லப்படுகிறது என்று வைத்திய கலாநிதி செனல் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.