ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு விதிக்கப்பட்ட போட்டித்தடை
காபூல் பிரீமியர் லீக்கின் (KPL) 2வது பதிப்பின் போது ஏசிபி மற்றும் ஐசிசி ஊழல் தடுப்பு விதிகளை மீறியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர் இஹ்சானுல்லா ஜனத் ( Ihsanullah Janat) அனைத்து வகையான கிரிக்கெட் நடவடிக்கைகளிலிருந்தும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார்.
முறையற்ற செல்வாக்கு அல்லது போட்டியின் முடிவு, முன்னேற்றம், நடத்தை அல்லது வேறு எந்த அம்சத்தையும் சரிசெய்வதற்கான முயற்சிகளை உள்ளடக்கிய ஐசிசி ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரிவு 2.1.1ஐ மீறியதற்காக ஜனத் குற்றவாளியாக கண்டறியப்படடுள்ளார்.
விசாரணைகள்
இந்த விதி மீறலினால், கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனத் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதுடன், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், ஏசிபி ஊழல் தடுப்பு பிரிவு (ஏசியு) மேலும் மூன்று வீரர்களும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், அவர்களின் குற்றத்தை உறுதிப்படுத்திய பின்னர் இது தொடர்பான முடிவுகள் எட்டப்பட்டு, இஹ்சானுல்லா ஜனத் மீதான தடை இந்த அறிக்கை வெளியானவுடன் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
