ஆப்கானிஸ்தானில் கோர விபத்து: 21 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் கெராஸ்க் மாவட்டத்தில் பேருந்து ஒன்று எண்ணெய் தாங்கி வாகனம் ஒன்றுடன் மோதியதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டள்ளன.
குறித்த விபத்துச் சம்பவமானது இன்று (17.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம்
சம்பவத்தின்போது ஹெராத் நகரிலிருந்து தலைநகர் காபூலுக்குப் பயணித்த உந்துருளி, எரிபொருள் வாகனம் மற்றும் பேருந்து ஆகியவை காந்தஹார் - ஹேராத் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உந்துருளியில் மீது மோதிய பின்னர் பேருந்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் பயணித்த எண்ணெய் வாகனம் மீது மோதியுள்ள நிலையில் தீ பரவலும் ஏற்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த 38 பேரில் 11 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹெல்மண்ட் மாநில பொலிஸ் தலைமைப் பேச்சாளர் ஹசதுல்லா ஹக்கானி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
