நடுவானில் குழந்தையை பிரசவித்த ஆப்கான் பெண்ணால் பரபரப்பு!
அமெரிக்க விமானத்தில் நடுவானில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்கு வந்த நிலையில் அந்நாட்டு பொதுமக்கள் பலர் வெளிநாடுகளுக்கும் தப்பித்து வருகின்றனர்.
அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் இரவும் பகலுமாக ஆப்கான் மக்களை காபூலில் இருந்து விமானம் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.
காபூல் விமான நிலையத்திற்கு செல்பவர்களை நாங்கள் தடுக்க போவதில்லை என்று தாலிபான்கள் அறிவித்ததை தொடர்ந்து விமான நிலையத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,
