அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்புவது: சட்டத்தரணி ஸ்ரீகாந்தா கேள்வி

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Theepan Sep 06, 2024 04:37 PM GMT
Report

தமிழ் மக்களின் நீண்ட கால இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க முடியாத ஜனாதிபதி வேட்பாளர் அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்பி வாக்களிக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த சட்டத்தரணிமான நல்லதம்பி சிறிக்காந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து இன்றையதினம்(06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர மாற்றத்திற்காக வாக்களியுங்கள் என்ற கோரிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

றீ(ச்)ஷாவில் மாபெரும் உணவுத் திருவிழா ஏற்பாட்டு திகதியில் மாற்றம்

றீ(ச்)ஷாவில் மாபெரும் உணவுத் திருவிழா ஏற்பாட்டு திகதியில் மாற்றம்


தமிழ் மக்களின் வாக்குகள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களால் மறக்க முடியாத ஜேவிபி கட்சியில், தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஜனாதிபதி வேட்பாளர் அநுர களமிறங்கி உள்ளார்.

வடக்கு - கிழக்கு தமிழ் மக்களை சட்டரீதியாக பிரித்தவர்கள் தமிழ் மக்களிடம் மாற்றத்திற்காக வாக்களியுங்கள் என கேட்கின்ற நிலையில் தமிழ் மக்கள் என்ன நம்பிக்கையில் வாக்களிக்க முடியும்?

ஊழலை ஒழிக்கப் போகிறோம், நாட்டை சூறையாடியவர்களுக்கு தண்டனை வழங்கப் போகிறோம், என அநுர கூறுவது நல்ல விடயம் அதை மட்டும் வைத்து தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று விடலாம் என நினைக்கக் கூடாது.

அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்புவது: சட்டத்தரணி ஸ்ரீகாந்தா கேள்வி | Advocate Srikanta Press Meet Speech

தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்க்கும் நீங்கள் தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினைக்கு தீர்ப்பு வழங்குவது தொடர்பில் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏதுவும் குறிப்பிடவில்லை.

உங்களைப் போன்ற பல இடதுசாரி தலைவர்களை நான் கண்டிருக்கிறேன்.  அவர்களுடன் நீண்ட உறவினை கொண்டிருந்தவன் என்ற ரீதியில் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வினை உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

தம்பி அநுரவிடம் நான் ஒன்றை கூறுகிறேன், இன்னும் நாட்கள் இருக்கின்றன.

நாளையோ, நாளை மறு தினமும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குங்கள், உங்களுக்கான ஆதரவு தொடர்பில் நாங்கள் சிந்திப்போம்.

கடந்த காலங்களில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தமை பாரிய தவறு என்பதை தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.

தேர்தல் காலங்களில் தமிழ் மக்களிடம் தேன் போன்ற வார்த்தைகளை கூறி வாக்குகளை கேட்கும் தென்னிலங்கை வேட்பாளர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் நம்பத் தயாராக இல்லை.


அதன் காரணமாக நீண்ட காலமாக தென்னிலங்கை வேட்பாளர்களால் ஏமாற்றப்பட்ட தமிழ் மக்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டனர்.

எமது பொது வேட்பாளர் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் கோரிக்கைகளை தாங்கி தென் இலங்கைக்கு சர்வதேசத்திற்கும் ஒரு செய்தியை கூறவே களமிறங்கி உள்ளார்.

ஆகவே தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வினை முன் வைக்காத எந்த ஒரு வேட்பாளரையும் தமிழ் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல் - கஜி

வாகன இறக்குமதிக்கான தற்போதைய விலையில் 80 வீதம் குறைப்பு: ஜனாதிபதி வேட்பாளர் உறுதி

வாகன இறக்குமதிக்கான தற்போதைய விலையில் 80 வீதம் குறைப்பு: ஜனாதிபதி வேட்பாளர் உறுதி

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் சுற்றி திரிபவர்கள் கைது செய்யப்படுவார்கள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் சுற்றி திரிபவர்கள் கைது செய்யப்படுவார்கள்

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Markham, Canada

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US