அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளைத் தளபதி- பிரதி அமைச்சர் இடையில் முக்கிய பேச்சு
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், பிராந்திய பாதுகாப்புச் சவால்கள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் அனர்த்த நிவாரணத் திறன்களை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, கடல்சார் கள விழிப்புணர்வை வலுப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
முக்கிய பேச்சு
சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் சர்வதேச குற்றச் செயல்களை முறியடிப்பதற்கு மேம்பட்ட தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகள் அவசியம் என்பதை இரு தரப்புகளும் வலியுறுத்தின.

இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்த அமெரிக்கா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் இதன்போது நன்றிகளைத் தெரிவித்தார்.
குறிப்பாக, அண்மைய 'டித்வா' இயற்கை அனர்த்தத்தின் போது அமெரிக்கா வழங்கிய அவசர மனிதாபிமான உதவிகளையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
கூட்டுப் பயிற்சிகள்
அமெரிக்க கடலோர காவல் படையின் கப்பல் வருகையானது, இலங்கைக் கடற்படை தனது கடல் எல்லைப் பாதுகாப்புச் சவால்களைச் சமாளிக்க கூடுதல் பலத்தை வழங்கும் ஒரு முக்கிய முன்னேற்றம் என இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுப் பயிற்சிகள் மற்றும் பயிற்சித் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் பசுபிக் கடற்படை கட்டளை அதிகாரிகள், இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.





ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam