மாநகர முதல்வரால் ஆணையாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு (Photo)
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி. சரவனபவன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை இன்று மேல்நீதிமன்ற நீதிபதி அ.அப்துல்லா ஒத்திவைத்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகாரங்களை ஆணையாளரிடம் இருந்து மீளவும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் அவர்கள் பெற்றுக்கொள்ள தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பாக இன்றையதினம் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்,
மாநகர முதல்வர் தி. சரவணபவன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட தடையீட்டு எழுத்தாணை கூறும் விண்ணப்ப வழக்கானது இன்றைய தினம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது எதிர் மனுதாரர்கள் சார்பில் சில ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டது. அதாவது மனுதாரர்கள் சார்பில் கோரப்பட்ட மாற்று சத்திய கூற்று பிரதிகள் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் குறித்த பிரதிகள் கிடைக்காத படியால் உடனடியாக இந்த வழக்கை இறுதித் தீர்ப்பு கட்டளைக்கு நியமிக்குமாறு விண்ணப்பம் செய்து அதற்கு மேலதிகமாக ஒரு எழுத்து மூல சமர்ப்பணத்தையும் திறந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
விண்ணப்பம் தொடர்பில் எமது எதிர் சமர்ப்பண விண்ணப்பம் செய்திருந்தோம் இதில்
மேன்முறையீட்டு நீதிமன்ற ஒழுங்கு விதிமுறைகளை சுட்டிக் காட்டி இருந்தோம் அந்த
அடிப்படையில் அவதானித்த கௌரவ நீதிபதி அவர்கள் குறித்த விடயம் தொடர்பாக
மாற்றுச் சக்தி கூற்று கிடைக்காத காரணத்தினால் தமது கட்டளைக்காக எதிர்வரும்
24ஆம் திகதி திகதி வழக்கை ஒத்திவைத்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.


நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam
