இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடன்
ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடனை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவுவதற்காக இந்த சலுகைக் கடன் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் நாட்டின் வங்கித் துறையின் ஸ்திரத்தன்மை மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்த உதவும் என கூறப்படுகிறது.
நிதித் துறையின் ஸ்திரத்தன்மை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சமீபத்திய மதிப்பாய்வின் படி, இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான தற்காலிக அறிகுறிகளைக் காட்டுகிறது.
எனினும் முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை, என ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்படுகிறது.

இது தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் கூறுகையில்,
"நிதித் துறையின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான நாட்டின் மூலோபாயத்துடன் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மேலோட்டமான அபிவிருத்தி நோக்கமானது முழுமையாக இணங்கியுள்ளது.
அதேவேளையில் வங்கிகள் இறுதியில் மீளப்பெறுவதற்கு நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறது.” என்றார்.
என்னை விமர்சிக்கும் முட்டாள்களுக்கு பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சபையில் சாணக்கியன் பதிலடி(Video)
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri