மீண்டுமொரு சமூக நெருக்கடி ஏற்படக்கூடும்: உதய கம்மன்பில எச்சரிக்கை

Sri Lanka Government Of Sri Lanka Economy of Sri Lanka
By Mayuri Dec 08, 2023 08:16 AM GMT
Report

மீண்டுமொரு சமூக நெருக்கடி ஏற்படக்கூடும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்துக்கு இது புரியவில்லை என்றால் மக்களுடன் இணைந்து வீதிக்கு இறங்கி முறையாக தெளிவுபடுத்த நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தர லங்கா சபாவின் தலைமையகத்தில் நேற்று (07.12.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வட் வரி மாற்றம்

ஜனாதிபதி வேட்பாளராக நால்வரை களமிறக்க திட்டமிடும் மகிந்த கட்சி

ஜனாதிபதி வேட்பாளராக நால்வரை களமிறக்க திட்டமிடும் மகிந்த கட்சி


அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த வருடத்திலிருந்து வட் வரியை இரு முறைகளில் மாற்றுவதற்கு இந்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போது வரையில் 8 சதவீதத்திலிருந்து 12 வீதத்துக்கும் அதிலிருந்து 15 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ள வட் வரியை அடுத்த வருடத்தில் 18 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது.

மறுபுறம், இதுவரையில் வட் வரி அறிவிடப்படாத பொருட்களில் சில அத்தியாவசியப் பொருட்களை தவிர ஏனைய சகலவற்றுக்கும் வட் வரி அறவிடப்படும். இதில் குறிப்பாக நீர், மின்சாரம் மற்றும் எரிபொருளுக்காகவும் வட் வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மீண்டுமொரு சமூக நெருக்கடி ஏற்படக்கூடும்: உதய கம்மன்பில எச்சரிக்கை | Economic Crisis May Come Again

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதனை செய்யாமல் இருக்க முடியாது. விருப்பம் இல்லாவிட்டாலும் இதனை செய்தே ஆகவேண்டும் என்று அரசாங்கம் தர்க்கம் செய்கிறது. ஆனால், இது முழுமையாக பொய்யான தர்க்கமாகும். நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் எந்தவொரு இடத்திலும் வட் வரியை 18 சதவீதத்தால் அதிகரிக்குமாறு குறிப்பிடப்படவில்லை.

வட் வரியை 18 சதவீதமாக அதிகரிக்குமாறு இந்த ஒப்பந்தத்தின் எந்த இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தின் தலைவர்களுக்கும் மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கும் திறைசேரியின் அதிகாரிகளுக்கும் சவால் விடுக்கிறேன்.

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு (Video)

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு (Video)


அரச வருமானம்

2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதியாகும்போது அரச வருமானம் அல்லது வரி வருமானம் 650 பில்லியன் ரூபாவரையில் அதிகரித்திருக்க வேண்டும் என்றும் ஜூலை 31 ஆம் திகதியாகும்போது வரி வருமானத்தை 1300 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருக்க வேண்டும் என்றும் வருட இறுதியில் 2500 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருக்க வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு வருமான இலக்குகளை வழங்கியிருந்தது.

மீண்டுமொரு சமூக நெருக்கடி ஏற்படக்கூடும்: உதய கம்மன்பில எச்சரிக்கை | Economic Crisis May Come Again

இந்த இலக்குகள் அடையப்படவில்லை. டிசம்பரின் முதல் வாரத்தை சந்தித்துள்ளோம். ஆனால், இதுவரையில் இரு இலக்கையும் நிறைவு செய்யவில்லை. வட் வரியும் தொழிலாளர்களிடமிருந்து அறவிடப்படும் வருமான வரியும் முறையாக அறவிடப்பட்டுள்ளது.

வருமான வரியினூடாக 100 பில்லியன் ரூபா எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும் தற்போதுவரையில் அதிலும் பார்க்க 120 பில்லியன் ரூபா சேகரித்து நிறைவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பாரிய நிறுவனங்கள், செல்வந்தர்களிடமிருந்து பெறவேண்டிய வருமான வரியே இலக்கின் அடிப்படையில் சேகரிக்க முடியாமல் போயுள்ளது.

கோட்டாபயவை தொலைபேசியில் அழைத்த கர்தினால் : உதய கம்மன்பிலவுக்குச் சென்ற தகவல்

கோட்டாபயவை தொலைபேசியில் அழைத்த கர்தினால் : உதய கம்மன்பிலவுக்குச் சென்ற தகவல்


இந்த விடயத்திலேயே தவறு இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவினரின் வரியை அறவிடாமலிருப்பதற்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைப்பதாலேயே அரசாங்கத்தால் அதன் வரி இலக்குகளை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இடைவெளியை நிரப்புவதற்காக மீண்டும் அப்பாவி மக்கள் செலுத்தும் வட் வரியை மூன்று சதவீதத்தால் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களுக்காக வட் வரியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பாரதூரமான பிரச்சினை

அவ்வாறெனில் ஏன் ஒரு நாட்டில் நீர், மின், எரிபொருளுக்கான வட் வரி அறவிடப்படுகின்றது என்றால், ஒரு பொருள் ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியமானவையாகும். இதனைவிட பாரதூரமான பிரச்சினை என்னவென்றால் தற்போதையளவில் இலங்கையின் மின் கட்டணம் இலங்கையில் அதிகளவான கட்டணமாக மாறியுள்ளது.

மீண்டுமொரு சமூக நெருக்கடி ஏற்படக்கூடும்: உதய கம்மன்பில எச்சரிக்கை | Economic Crisis May Come Again

அதன்காரணமாக தொழில் துறையில் செலுத்தப்படும் மின் கட்டணமும் சிங்கப்பூரிலுள்ள மின்கட்டணத்துக்கு சமமானது என்பதால் இலங்கையிலுள்ள சிறியளவான தொழிற்சாலை உரிமையாளர்கள் அவர்களின் தொழிற்றுறையை மூடியுள்ளதுடன் பாரியளவான தொழிற்சாலை உரிமையாளர்கள், இலங்கையிலிருந்து வியட்னாம், பங்களாதேஷ், ஆபிரிக்கா போன்ற நாடுகளில் அவர்களின் வர்த்தகங்களை நிறுவ ஆரம்பித்திருக்கிறார்கள்.

நீர், மின், எரிபொருளுக்கு வட் வரியை இணைத்தால் மீண்டும் உற்பத்திச் செலவு அதிகரிக்கும். அதனூடாக மீண்டும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்காக போட்டித் தன்மை சர்வதேச சந்தையில் இல்லாமல் போகும். ஏற்றுமதி பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திப்பதுடன், தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிவாய்ப்பற்ற நிலை உருவாகும்.

தமிழகத்தில் நிலநடுக்கம்

தமிழகத்தில் நிலநடுக்கம்


இந்த நிலைமை நீடித்தால் பொருளாதாரத்தில் மீண்டும் நெருக்கடி நிலைமை உருவாகி இந்த வருடத்தில் சேர்க்கப்பட்ட வட் வரியை கூட அடுத்த வருடத்தில் சேகரிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்த அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கான ஆரம்பத்தையும் அதற்கான தீர்வுகளையும் இதுவரையில் உணரவில்லை.

பொருளாதாரம் தொடர்பில் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு துளியளவும் அனுபவம் இல்லை என்பதை உறுதிப்படுத்திய இன்னுமொரு சந்தர்ப்பமாகவே இதனைக் கருதுகிறோம். மீண்டுமொரு சமூக நெருக்கடி ஏற்படக்கூடும். இது அரசாங்கத்துக்கு புரியவில்லை என்றால் மக்களுடன் வீதிக்கு இறங்கி அரசாங்கத்துக்கு புரியும் வகையில் தெளிவுபடுத்த தயாராக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: திடீரென வீதிக்கு நடுவே வந்த நபரால் அமைதியின்மை(Video)

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: திடீரென வீதிக்கு நடுவே வந்த நபரால் அமைதியின்மை(Video)


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US