அமெரிக்காவின் குற்றச்சாட்டு காரணமாக அதானி குழுமத்துக்கு ஏற்பட்டுள்ள நட்டம்
அதானி குற்றச்சாட்டு தமது குழுமத்தின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 55 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக , இந்தியாவின் அதானி குழுமம் அறிவித்துள்ளது.
எனினும் தமது நிறுவனம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அதானி குழுமம் மறுத்துள்ளது.
அமெரிக்காவின் நீதித்துறை அதானி குழுமம் மீது குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து, தமது பட்டியலிடப்பட்ட 11 நிறுவனங்களின் சந்தை மூலதனத்தில் 55 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அதானி குழுமம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
சர்வதேச முதலீட்டாளர்கள்
இந்தநிலையில், தம்மீதான குற்றச்சாட்டுக்கள், சர்வதேச முதலீட்டாளர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாக அந்த குழுமம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி தமது சூரியசக்தி மின்சாரத்திட்டத்தை அங்கீகரிப்பதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிதாக வெளியிடப்பட்ட அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று அதானி குழுமம் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri