இந்திய நிறுவனம் இலங்கையுடனான முக்கிய உடன்படிக்கையில் கைச்சாத்து
இந்தியாவின் அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை, கூட்டாக அபிவிருத்தி செய்ய அதன் உள்ளூர் வர்த்தக பங்காளியான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் இலங்கை துறைமுக ஆணையம் (SLPA) ஆகியவற்றுடன் பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்பர் (BOT) (கட்டுமானம்-செயல்பாடு-பரிமாற்றம்) உடன்படிக்கையில் இன்று கையெழுத்திட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டிய முதலீடாகும்.
கடந்த மார்ச் மாதத்தில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம், இந்தியாவின் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட், அதன் உள்ளூர் பிரதிநிதியான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை உடன் இணைந்து ஒரு பொது - தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி, மேற்கு முனையம் 35 வருட கட்டுமானம், செயல்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் (BOT) அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
மேற்கு துறைமுக முனையம் 1,400 மீற்றர் நீளம் மற்றும் 20 மீற்றர் ஆழம் கொண்டதாக இருக்கும், அதானி குழுமத்தின் அறிக்கையின்படி, பெரிய கொள்கலன்களை கையாள இது ஒரு பிரதான தளமாக இது அமையவுள்ளது.
அதேநேரம் இந்த திட்டம், இலங்கையில் முதல் தடவையாக இந்தியத் துறைமுக நிறுவனம் ஒன்று கூட்டு முயற்சியில் 51% பங்கைக் கொண்டிருக்கும் திட்டமாக அமைந்துள்ளது.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 15 மணி நேரம் முன்

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam
