சிங்கள நடிகை தமிதா அபேரத்ன புதிய கட்சியில் இணைவு
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்த பிரபல சிங்கள சினிமா நடிகை தமிதா அபேரத்ன, இன்று அக்கட்சியில் இருந்து முற்றாக விலகிக்கொண்டுள்ளார்.
தமிதா அபேரத்னவுக்கு எதி்ர்வரும் பொதுத்தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும் கடைசி நேரத்தில் தமிதாவுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கடும் அதிருப்தியில் இருந்த தமிதா அபேரத்ன, இன்று அக்கட்சியில் இருந்தும் முற்றாக விலகிக்கொண்டுள்ளார்.
புதியதொரு அரசியல் கட்சி
அத்துடன் இம்முறை பொதுத் தேர்தலில் அஞ்சல் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசிய முன்னணியில் அவர் இணைந்து கொண்டுள்ளதாக கொழும்பில் நடைபெற்ற இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தமிதா அபேரத்ன அறிவித்துள்ளார்.
ஜனநாயக தேசிய முன்னணியானது சட்டத்தரணி மொஹான் பெரேராவைத் தலைவராகக் கொண்டுள்ள புதியதொரு அரசியல் கட்சியாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri