இந்திய மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தெரிவு செய்துள்ளனர்: நடிகர் ரஜினிகாந்த்
இந்திய மக்களவைத் தேர்தலில் மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்ந்தெடுத்துள்ளமை ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி என நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி (Narendra modi) இந்திய நாட்டின் பிரதமராக பதவி ஏற்பது அவரது சாதனையாகும்.
ஆரோக்கியமான அறிகுறி
மக்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு ஒரு ஆரோக்கியமான அறிகுறியாகும்.

மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகள் சிறப்பாக அமையும் என எதிர்பார்ப்பதோடு தமிழ் விடுதலைபுலிகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளமைக்கு எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan