கிண்ணியாவில் பள்ளிவாசல்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் செயற்பாடுகளையும் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது அதிக கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் சூழ்நிலை காரணமாக, கோவிட் பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்று லுகர் தொழுகையுடன் அனைத்து பள்ளிவாசல்களின் கதவுகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுடன், அதான் சொல்லுவதற்கான அனுமதி மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது என கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். கனி குறிப்பிட்டார்.
ஏற்கனவே கிண்ணியாவில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தவிர்ந்த ஏனைய அனைத்து வியாபார நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இன்னும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri