கிண்ணியாவில் பள்ளிவாசல்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் செயற்பாடுகளையும் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது அதிக கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் சூழ்நிலை காரணமாக, கோவிட் பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்று லுகர் தொழுகையுடன் அனைத்து பள்ளிவாசல்களின் கதவுகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுடன், அதான் சொல்லுவதற்கான அனுமதி மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது என கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். கனி குறிப்பிட்டார்.
ஏற்கனவே கிண்ணியாவில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தவிர்ந்த ஏனைய அனைத்து வியாபார நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இன்னும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
