முல்லைத்தீவில் கொட்டும் மழையிலும் 100 நாள் செயல் முனைவு(Photos)
வடக்கு-கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 84 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வள்ளிபுனம் கிராமத்தில் நேற்று (23.10.2022) ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணியளவில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
100 நாள் செயல்முனைவு
குறித்த 100 நாள் செயல்முனைவின் 84 ஆம் நாள் போராட்டத்தில் கொட்டும் மழையிலும் முல்லை புதுக்குடியிருப்பு வல்லிபுரம் கிராமத்தில் உள்ள பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும். நாங்கள் நாட்டை துண்டாடவோ தனியரசோ கேட்கவில்லை.
இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக
உரிமையாகும்.
கோரிக்கைகள்
13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கதுக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது போன்ற வாசகங்களுடன் பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம். எங்கள் நிலம் எமக்கு வேண்டும். நடமாடுவது எங்கள் உரிமை. பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை. ஒன்று கூடுவது எங்கள் உரிமை. மத வழிபாடு எங்கள் சுதந்திரம். எமது மத தளங்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தாதே. இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே என பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
