தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற ட்ரக் வண்டி இமதுவ மற்றும் கொக்மாதுவ இடையில் 112 கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
ட்ரக் வண்டியின் பின்புற சக்கரங்கள் கழன்றுள்ளதுடன் சாரதிக்கு வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் புரண்டுள்ளது. இந்த சம்பவம் இன்று முற்பகல் நடந்துள்ளதுடன் சம்பவத்தில் காயமடைந்த சாரதியும் உதவியாளரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ட்ரக் வண்டி வீதியில் புரண்டதால், வீதியின் ஒரு தடத்தில் போக்குவரத்துக்கு தடையேற்பட்து.
இதனிடையே இந்த விபத்து இடம்பெற்ற இடத்தில் இந்தியர்கள் இரண்டு பேர் பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்த இடத்தில் சென்றுக்கொண்டிருந்த கெப் வண்டியில் மோதியதில் மற்றுமொரு விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த இந்தியர்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
