மோட்டார் சைக்கிள் இரண்டு மோதியதில் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் இருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (12) மாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் நொச்சிகுளம்- சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த கதிரவேல் மனோஷன் (31வயது) மற்றும் விஜயகுமார் பிரதாப் (20வயது) எனவும் தெரியவருகின்றது.
நொச்சிகுளம்-சாந்திபுரம் பகுதியிலிருந்து கேஸ் வாங்குவதற்காகக் கடைக்கு கேஸ்ஸை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த போது பிரதான வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோதியதாகவும், இதில் மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் காயங்களுக்குள்ளான நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை மற்றைய இருவரும் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் இரண்டையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.