கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் உட்பட ஐந்து பேர் கைது!
போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட 5 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(28.6.2026) போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கேகாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்களுள் ஒரு பெண்ணும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சந்தேகநபர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்கள் ஒரு புதிய உத்தியைக் கையாண்டு, 6 கிலோகிராம் 110 கிராம் ஹசீஸ் போதைப்பொருளையும், 11 கிலோகிராம் 062 கிராம் குஷ் போதைப்பொருளையும் 15 கண்ணாடிப் போத்தல்களுக்குள் அடைத்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள இலங்கை தீர்வையற்ற வர்த்தக வளாகத்தின் பெயர் அச்சிடப்பட்ட பொலித்தீன் பைகளில் மறைத்து எடுத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை வெளியேற முற்பட்ட போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri